தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிசம்பர் 5) காலை புயலாக மாறியது.
1998ஆம் ஆண்டு அரபிக் கடலில் அதிகபட்சமாக ஆறு புயல்கள் உருவாகியிருந்தன. அரபிக்கடலில் ஆண்டுக்கு ஒரு புயல் மட்டுமே உருவாவது வழக்கமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஏழு புயல்கள் உருவாகியுள்ளன.
மொத்தமாக வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த ஆண்டு 11 புயல்கள் உருவாகியுள்ளன. இதில் அரபிக்கடலில் 7 புயல்களும், வங்க கடலில் 4 புயல்களும் அடங்கும். வழக்கமாக வட இந்தியப் பெருங்கடலில் ஆண்டொன்றுக்கு 12 புயல்கள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.